ஒரு வேண்டுகோள்

தமிழில் 'வாசிக்கும்' பழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவு என்பது நான் கண்டறிந்த உண்மை.
இருப்பினும் இங்கு தமிழில் எழுதுவதற்கு காரணம்

1. அது என் தாய் மொழி

2. அது ஒரு மிகச்சிறந்த மொழி. நம் உரையாடல்களில் இன்று நாம் சரளமாக ஆங்கிலம் கலந்து பேசுகிறோம் ஆனால் அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக தமிழில் மிக அழகான ஆச்சிரியமூட்டும் வார்த்தைகள் உள்ளன. என்னால் முடிந்தவரை நான் அவைகளை என் கதைகளில் உபயோகிக்கிறேன் .

வாசகன் இல்லா எழுத்தாளன் ஒரு வாசனை இல்லா மலரை போல் .என்ன தான் எழுதுவதற்கு ஒரு 
படைப்புந்துதல் இருப்பினும் ஒரு வாசகன் தரும் ஊக்கமும், பலமும் வேறு எதுவும் கொடுப்பதில்லை.

ஆதலால் 
ஜன்னல் சொல்லும் கதைகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு பதிவுகளுக்கும் தங்கள் பின்னூட்டங்களை (கமெண்ட்ஸ்)பதிவு செய்யவும்.

நன்றி,
ஜன்னல்.